உலக மகளிர் தினம்

அடிமைத்தனம் ஆண், பெண் என பாகுபாடின்றி நிறைந்திருக்கும் இம்மண்ணில் நாளை பெண்கள் தினம் கொண்டாடப்படும்.
 
இன்றே என் உடன் பிறவா சகோதரி ஒருவர்… காணொளி ஒன்றை அனுப்பி ஆண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்லி விட்டாள்.
 
அவள் அனுப்பிய காணொளியை தயாரித்த குழு… பெண்களை பெண்களுக்கு சம உரிமை தரச் சொல்லிக் கேட்டிருக்கு. அதையும் பெண்ணை வைத்தே சொல்ல வைத்திருக்கு. சம உரிமைக்காக அவர்கள் காட்டியிருக்கும் காட்சி அமைப்புகளில் சில தனிப்பட்ட முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இல்லாததால் அந்தக் காணொளியை இங்கு நான் பகிரவில்லை.
 
ஆனாலும் உலகம் முழுவதும் மகளிர் தினம் குறித்து என்ன தான் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. நாம் அனைவரும் அதை உற்று நோக்கி அதன் உண்மைத் தன்மையை நம் அன்றாட வாழ்வோடு ஒப்பு நோக்கி புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.
இதோ , ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பெண்களுக்கான குழு(UN WOMEN) இந்த ஆண்டு பெண்கள் தினத்திற்காக வெளியிட்டிருக்கும் காணொளிகளில் ஒன்று அதன் மூலக் கருத்துடன் (ஆங்கிலத்தில் உள்ளது)
மேலும் விபரங்களுக்கு பின்வரும் தளத்தை பார்க்கவும்..
இந்த சமயத்தில்.. நான் வெளியிட்ட பின்வரும் காணொளிகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அத்துடன் என் சகோதரி தந்த சுரண்டல் என்ற தலைப்புக்கு எழுதிய வரிகளையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நான் வாழ்த்துகளே சொல்லாமல் இந்த மகளிர் தினத்தை ஒட்டி உங்களுடன் கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கும் காரணம் உண்டு. அதை உங்கள் சிந்தனைகளுக்கே விட்டு விடுகிறேன்.
Karuveli_Surandal

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.