தொட்டால் சுடும்…
என்ற தாய் வார்த்தையும்
“சுடும்” என்றால் என்னவென்றும்
அறியா பருவத்தே…
அந்த பிஞ்சு கரங்களில்
நான் தொட்டதுண்டு …
வீட்டில் எறிந்து கொண்டிருந்த
சிமிழ் விளக்கின் தழலை!
அதை நினைத்தாலும்…
சுடுபட்ட அந்த பிஞ்சு கரங்களாகிவிடும்
இக்கணத்திலும் என் கரங்கள்!
இது நான் நேற்று வரை…
இதோ… எல்லாம் அறிந்த இக்கணத்திலும்
மனிதம் மனிதம் வதைப்பதை,
அழிப்பதை தடுக்க
அக்கினியை ஆரத்தழுவிக்கொண்ட
உன்னை பார்த்த மறுகணமே
“நானும் அக்கினியின் குஞ்சாகிப்போனேன்”
“அக்கினியில் குஞ்சென்று மூப்பென்றும்
உண்டோ கூறு?’
தமிழ்க்கவி கேட்ட கேள்விக்கு
அர்த்தமும் புரிந்தது…
You must be logged in to post a comment.