கதிரவன் ஒளி வீச….
வீட்டை பூட்டி கொண்டு
மின்னொளிகளின் வசம் தஞ்சம் புகுவதுமேனோ?!
தென்றல்கள் உங்களுடன் உறவாட காத்திருக்க…
ஜன்னலை சாத்திவிட்டு
மின் விசிறியையும்…
குளிர் சாதனபெட்டியையும் நாடுவதுமேனோ?!
நடந்து கடக்க கால்களிருந்தும், காலமிருந்தும்
கால் கிலோ மீட்டரையும்
கடிந்து கொண்டே… டீசலும் பெட்ரோலும் போட்டு
வாகனத்தில் மட்டும் கடப்பதுமேனோ?!
நண்பனும் நாமும்….
குழந்தையும் தாயும்…
பேசி மகிழ்ந்திருக்கும் வேளையிலும்..
தொலைக்காட்சி பெட்டியின் இரைச்சலும் ஏனோ?!
ஒரு ரூபாய் சம்பாதிப்பது எத்தனை கஷ்டமுனு தெரியுமா? – என
எப்போதும் கேட்கும் தோழரும்
எத்தனையோ கருத்து நாளும் சொல்லும்… நாம் அனைவரும்
அறியாமல் போவதேனோ?!
எப்போதும் திரும்ப கிட்டாத…
எத்தனை முயன்றாலும்…
நம்மால் உருவாக்கவோ… படைக்கவோ…முடியாத
இயற்கை வளங்களை காப்பது
நம் ஒவ்வொருவரின் கடமையென்று!
You must be logged in to post a comment.