குறிப்பு : இக்கவிதை… உங்களுக்கு, உங்கள் திருமண வாழ்வின் முதல் சில மாதங்களை நினைவுபடுத்தினால் அதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல..
நாலு சொல்லில் புத்தகத்திற்கான பணிகளுக்கிடையே… அதைத் தாண்டிய ஒரு சிந்தனைக்குள் சென்று வருவதே ஒரு வித்தியாசமான அனுபவம். அநேகமாக இத்தகைய கருப்பொருளில் (தலைவிக்கும் தலைவனுக்குமிடையேயான அன்பு, அதுவும் அதை முத்தங்கள் வழியே சொல்வதாய்) எழுதி நீண்ட நாட்களாயிருக்குமென்றே நினைக்கிறேன். அப்படி எழுதிய முந்தைய கவிதைகள் எனக்கு நினைவில் கூட இல்லை. எழுதி முடித்ததும், முடிக்காமல் எழுதும் படி தூண்டக் கூடிய ஒரு கருப்பொருளாய் இருந்தது இந்நிகழ்வு, கருப்பொருள் என்பதனை விட அந்நிகழ்வுக்குள்ளே பிண்ணிக் கிடக்கும் உணர்வுகள் என்று சொல்லலாம். இதை ஒரு குறுங்கதையாய் சொன்னால் எப்படி இருக்குமென்ற எண்ணத்தையும் விதைத்து சென்றது. முயற்சிக்கிறேன். எழுதினால்.. விரைவில் அவ்வரிகளுடனும் சந்திக்கிறேன். மேலும் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் ஒரு காட்சியை / நிகழ்வை எழுத்துக்குள் படைப்பதென்பது மிகவும் சுவாரசியமான விசயம். எழுதி எழுதியே காட்சிகளை இரசிக்கிறோம்.
ஒவ்வொரு கவிதைக்கு முன்னும் பின்னும் கதைகளுண்டு… அவை மிகவும் சுவாரசியமாக இருக்கும்… 🙂
இக்கவிதைக்கான படம் தேடிக் கண்டு பிடிக்க ஆன நேரம் வீண் போகவில்லை என்றே நினைக்கிறேன். அநேகமாக இவ்வரிகளுக்காகவே அவர்கள் உருவாக்கியிருக்கக் கூடும் என நம்புகிறேன். மேலும் பல வரிகளைக்கும் சொந்தமாகப் போகுது இப்படம். உருவாக்கியவருக்கு நன்றி.. நன்றி… நன்றி..
அன்புடன்,
கருவெளி ராச.மகேந்திரன்